“பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது; முதலீடுகள் அதிகரித்து வருகின்றன” - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!!

“பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது; முதலீடுகள் அதிகரித்து வருகின்றன” - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!!

Update: 2019-09-14 11:04 GMT


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு சலுகைகளை இன்று அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


ஏற்றுமதியை ஊக்கவிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகினறன. பணவீக்கம் 4 சதவீதத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.


இதனால், பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. உற்பத்தி துறையில் ஏற்பட்ட சிறு சறுக்கலை சரி செய்ய முயற்சி செய்யப்படுகிறது.


பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் பிரகாசமாக தெரிகிறது. பகுதி கடன் உறுதி திட்டம் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு உள்ளது. தொழிற்சாலை உற்பத்தி அதிகரித்து வருவதற்கான அறிகுறி தெரிகிறது.


அன்னிய செலாவணி கையிருப்பு போதுமான உள்ளது. நிறுவனங்களில் உற்பத்தியை அதிகரிப்பதற்கான தெளிவான அறிகுறிகள் தெரிகின்றன. தொழில் நடைமுறைகள் எளிதாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.





தொழில்துறையினருக்கு வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு பலனை நுகர்வோருக்கு வழங்க வங்கிகள் நடவடிக்கை எடுத்துள்ளன.


பொதுத்துறை வங்கிகளை 19-ஆம் தேதி சந்திக்க உள்ளேன். சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதி சலுகை அதிகரித்துள்ளது. வரா கடன்களை வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால், வங்களில் வரா கடன் குறைந்து வருகிறது.


வரி செலுத்தும் முறை எளிமையாக்கப்படும். வரி செலுத்துவதில் சிறு தவறுக்கான தண்டனைகள் நீக்கம். உற்பத்தி துறை மீண்டு வருகிறது. சிறுகுறு தொழில் முனைவோருக்கான காப்பீடு அதிகரிக்கப்படும். சிறுகுறு தொழில் துறையினருக்கு அதிக கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.





வர்த்தக கடன்களை போலவே வீட்டுக்கடனுக்கான நிபந்தனைகள் தளர்த்தப்படும். நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீடு கட்டும் திட்டத்துக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்.


ஜவுளி துறைக்கான புதிய திட்டம் 2020 ஜனவரி 1இல் துவங்கப்படும். 2020-இல் நான்கு இடங்களில் மெகா ஷாப்பிங் திருவிழா நடத்தப்படும்.


இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.


Similar News