ஒரு இந்து அடையாளம் நாஜிக்களின் சின்னம் என்று திரிக்கப்பட்ட வரலாறு - ஸ்வஸ்திக் அடையாளத்தை மீட்கும் போர்.!
ஒரு இந்து அடையாளம் நாஜிக்களின் சின்னம் என்று திரிக்கப்பட்ட வரலாறு - ஸ்வஸ்திக் அடையாளத்தை மீட்கும் போர்.!
இந்த கட்டுரையில் நாம் சில முக்கியமான கேள்விகளை கேட்கலாம். ஆனால் அதற்கு முன்பு இந்த கட்டுரையில் எழுப்பப்பட உள்ள கேள்விகளின் பல பரிமாணங்களை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
கிறிஸ்தவத்திற்கு முந்திய ஐரோப்பா
கிறிஸ்தவம் கண்டுபிடிக்கப் படுவதற்கு வெகு நாளைக்கு முன்பே மக்கள் ஐரோப்பாவில் சமூகங்களாக வாழ்ந்துள்ளனர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டியெடுத்துக் கண்டறிந்த பல கலைப் பொருட்கள் வாயிலாக, இந்த சமூகங்கள் நம்பிக்கை அமைப்புகள், தெய்வங்கள், சடங்குகள் மற்றும் சின்னங்களை ஒழுங்கமைத்து வாழ்ந்ததைக் கண்டறிய முடிந்தது. அந்தச் சின்னங்கள், குறிப்பாக, ஒரு சின்னம் தான் இந்தக் கட்டுரையின் விஷயம். ஐரோப்பா முழுமையுமே தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்தக் குறிப்பிட்ட சின்னத்தைக் கண்டறிந்தனர். அந்தச் சின்னம் கணிதத்தில் வரும் கூட்டல் குறியீட்டின் முனைகளில் கொக்கிகளை போல வளைந்து இருந்தது. எனவே அதை 'கொக்கி சிலுவை' (Hooked Cross) என அழைத்தனர். அந்த சின்னத்தை பயன்படுத்தியவர்கள் அதற்கு என்ன பெயர் வைத்து அழைத்தார்கள் என்று நமக்கு தெரியாது. எனவே தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதன் வடிவத்தை அதற்கு ஒரு விளக்கமான பெயரை கொடுத்திருக்க வேண்டும் என யூகிக்கலாம்.
இந்தச் சின்னம் ஐரோப்பாவில் மிகவும் பரவலாகி ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் இதை கிறிஸ்தவ சிலுவையின் ஒரு அடையாளமாக பயன்படுத்த தொடங்கினார்கள். இது இறப்பின் மீதான இயேசு கிறிஸ்துவின் வெற்றியைக் குறிக்கும் சின்னமாக பயன்படுத்தப்பட்டது. இந்த 'கொக்கி சிலுவை' கிறிஸ்துவ பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக ஏற்படுத்தப்பட்டு அதன் கலை மற்றும் கட்டிடக் கலைகளில் கூட இணைக்கப்பட்டது. உதாரணமாக ஆஸ்திரியாவில் உள்ள லாங் பேக் அவே.
இந்த அடையாளம் ஐரோப்பா முழுவதும் 'கொக்கி சிலுவை' என்றே அறியப்பட்டது. ஆனால் அதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு இருந்தது-இங்கிலாந்து.
'சூப்பர் இனம்' என்ற கற்பனை உருவாக்கம்:
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கொக்கி சிலுவையை கண்டறிந்தது, ஐரோப்பிய கல்வியாளர்களின் கற்பனை குதிரையை தட்டி விட்டது. அவர்கள் ஏகாதிபத்தியதிற்கு உதவி செய்ய பிரச்சார பொருட்களை உருவாக்கும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். உதாரணமாக மேக்ஸ் முல்லர், ஏகாதிபத்திய சக்திகள் இந்திய துணைக்கண்டத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு ஒரு 'நியாயமான' காரணத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தார்.