பராமரிப்பின்றி கிடக்கும் 25,000 தமிழக கிராமப்புற கோவில்கள் : மாத சம்பளமாக ₹19 பெரும் அர்ச்சகர் - இந்து அறநிலையதுறையின் அவலம்!
பராமரிப்பின்றி கிடக்கும் 25,000 தமிழக கிராமப்புற கோவில்கள் : மாத சம்பளமாக ₹19 பெரும் அர்ச்சகர் - இந்து அறநிலையதுறையின் அவலம்!
கும்பகோணத்திற்கு அருகிலுள்ள எராஹரம் கோவில் தான் ஆதி ஸ்வாமிமலை கோவிலாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு பண்டிகையும் இந்த கோவிலில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்ட காலம் அது. தினமும் மூன்று முறை பூஜைகளும் தவறாமல் நடக்கும். இன்று, ஒரே ஒரு அர்ச்சகர் தான் இந்த கோவில் பூஜைகளை செய்து வருகிறார். தினசரி ஒரு வேளை பூஜை தான் செய்து வருகிறார். சமுதாயம் எவ்வாறு மாறியுள்ளது என்பதற்கான அறிகுறியாக இந்த சிறிய கிராமப்புற கோவில் அமைந்துள்ளது. கிராமங்களில் உள்ள ஆலய வருவாய் கணிசமாக குறைந்து விட்டது.
தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் உள்ள 25,000 கோயில்களில், அர்ச்சகர்களோ அல்லது அறங்காவலர்களோ இல்லை. ஏராளமான இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை கிராமப்புற கோவில் அறங்காவலர்கள், கோவில்களை திருடர்களின் கூடாரமாக மாறுவதற்கு வழிவகுக்கும் வகையில், கோவில்களை விட்டுவிட்டு நகர்ப் புறங்களுக்கு குடியேறிவிட்டனர்.
வரலாற்று ரீதியாக, இந்த கோவில்கள் சோழர் காலத்தில் அல்லது அதற்கும் முன்பாகவே கட்டப்பட்டவை. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டின் 48% மக்கள் நகர்ப் புறங்களில் வாழ்கின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல், மாநிலத்தின் நகர்ப்புற குடியேற்றம் 15% அதிகரித்துள்ளது.
ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர், டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் கூறுகையில், "என் சகோதரி தவிர குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல வாழ்க்கை நிலை தேடி நகர் புறங்களுக்கு குடி பெயர்ந்து விட்டனர். நான் அர்ச்சகர் தான் என்றாலும் பிற குடும்ப உறுப்பினர்கள் மூதாதையர்கள் செய்ததை விட்டு விட்டார்கள்", என்கிறார்.
அனைத்து கலாச்சார மற்றும் சமூக ஈடுபாடுகளின் இடமாக கோவில்கள் இருந்தன. திருவிழாக்களில் பங்கேற்க மக்கள் நகரங்களில் இருந்து கிராமப்புற கோவில்களுக்கு வருகை தரும் போது தான் கிராமப்புற கோவில்களில் நிறைய பூஜைகளும் சடங்குகளும் செய்யப்படுகிறது.