"மோடி என் நண்பர்" - வெள்ளை மாளிகையில் நிகழ்ந்த தீபாவளி கொண்டாட்டத்தில் ட்ரம்ப் புகழாரம்
"மோடி என் நண்பர்" - வெள்ளை மாளிகையில் நிகழ்ந்த தீபாவளி கொண்டாட்டத்தில் ட்ரம்ப் புகழாரம்
அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த செவ்வாய் அன்று உயர் பதவியிலிருக்கும் இந்திய-அமெரிக்கர்களுடன் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். அப்போது இந்தியாவை சிறந்த "வர்த்தக பேச்சுவார்த்தையாளர் " என வர்ணித்து இரு நாடுகளின் உறவையும் பாராட்டி பேசினார்.
வரலாற்று சிறப்புமிக்க வெள்ளை மாளிகையின் "ரூஸ்வெல்ட் அறையில்" விழாவின் விளக்கை ஏற்றும் முன்னர் "இந்தியாவுடன் ஆழமான உறவை கொண்டிருக்கிறது அமெரிக்கா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடனான நட்புக்கு நான் கடமைபட்டுள்ளேன்" என பேசினார் ட்ரம்ப். இந்தியாவின் மாபெரும் விழாக்களில் ஒன்றான தீபாவளியை ட்ரம்ப் தொடர்ச்சியாக இரண்டாம் ஆண்டாய் வெள்ளை மாளிகையில் இந்திய அமெரிக்கர்களுடன் கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.டி.ஐ. செய்தி அறிக்கை படி, இரண்டு பெரும் ஜனநாயக நாடுகளுக்கிடையேயான சமீபத்திய "இந்திய - அமெரிக்க" வணிக ஒப்பந்தம் சார்ந்த பேச்சுவார்த்தையை குறிப்பிட்டு பேசிய ட்ரம்ப் "இந்தியாவுடன் சிறந்த வணிக ஒப்பந்தத்தை உருவாக்க முயற்சிகளை எடுத்து வருகிறோம் . ஆனால் அவர்கள் சிறந்த வணிகர்களாக இருக்கிறார்கள். பேச்சுவார்த்தை மேற்கொள்வதில் வல்லவர்களாக திகழ்கிறார்கள் . எனவே அவர்களுடன் இணைத்து பணியாற்றி வருகிறோம்" என பேசியுள்ளார்.
இந்திய பிரதமர் உடனான தனது நட்பை ஆமோதித்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மேலும் தனது மக்கள் இவான்க்கா, இவர் ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து இந்தியாவிற்கு பயணம் செய்யும் முதல் உயர் அதிகாரியாவார். ஐவரும் பிரதமர் மோடியின் நட்பு வட்டத்தில் உள்ளார் என்பதை கூடுதல் தகவலாக பகிர்ந்து கொண்டார்.
கிட்டத்தட்ட 24 -ற்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்க உயர் அதிகாரிகளுடன், இந்திய தூதருக்கும் அழைப்பு விடுத்திருந்தார் ட்ரம்ப். இந்திய தூதுவர் திரு நவ் தேஜ் சிங் சர்னா, மற்றும் அவரின் மனைவி அவினா சர்னா மற்றும் அவரின் சிறப்பு உதவியாளர் பிரதிக் மத்தூர் ஆகியோர் கொண்டாட்டங்களுக்காக வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்தது அறிய பண்புகளில் இருந்தது. சர்னா கூறுகையில் "இந்திய -அமெரிக்க" இடையேயான இரு நாட்டு உறவில் இது மிகச்சிறப்பான தருணம் " என்றார் . "உண்மை மிக நெருக்கமான, முன்பிருந்ததை விடவும் நெருக்கமான தருணம்" என அதை ஆமோதித்தார் ட்ரம்ப்.
வரலாற்று சிறப்புமிக்க வெள்ளை மாளிகையின் "ரூஸ்வெல்ட் அறையில்" விழாவின் விளக்கை ஏற்றும் முன்னர் "இந்தியாவுடன் ஆழமான உறவை கொண்டிருக்கிறது அமெரிக்கா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடனான நட்புக்கு நான் கடமைபட்டுள்ளேன்" என பேசினார் ட்ரம்ப். இந்தியாவின் மாபெரும் விழாக்களில் ஒன்றான தீபாவளியை ட்ரம்ப் தொடர்ச்சியாக இரண்டாம் ஆண்டாய் வெள்ளை மாளிகையில் இந்திய அமெரிக்கர்களுடன் கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.டி.ஐ. செய்தி அறிக்கை படி, இரண்டு பெரும் ஜனநாயக நாடுகளுக்கிடையேயான சமீபத்திய "இந்திய - அமெரிக்க" வணிக ஒப்பந்தம் சார்ந்த பேச்சுவார்த்தையை குறிப்பிட்டு பேசிய ட்ரம்ப் "இந்தியாவுடன் சிறந்த வணிக ஒப்பந்தத்தை உருவாக்க முயற்சிகளை எடுத்து வருகிறோம் . ஆனால் அவர்கள் சிறந்த வணிகர்களாக இருக்கிறார்கள். பேச்சுவார்த்தை மேற்கொள்வதில் வல்லவர்களாக திகழ்கிறார்கள் . எனவே அவர்களுடன் இணைத்து பணியாற்றி வருகிறோம்" என பேசியுள்ளார்.
இந்திய பிரதமர் உடனான தனது நட்பை ஆமோதித்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மேலும் தனது மக்கள் இவான்க்கா, இவர் ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து இந்தியாவிற்கு பயணம் செய்யும் முதல் உயர் அதிகாரியாவார். ஐவரும் பிரதமர் மோடியின் நட்பு வட்டத்தில் உள்ளார் என்பதை கூடுதல் தகவலாக பகிர்ந்து கொண்டார்.
கிட்டத்தட்ட 24 -ற்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்க உயர் அதிகாரிகளுடன், இந்திய தூதருக்கும் அழைப்பு விடுத்திருந்தார் ட்ரம்ப். இந்திய தூதுவர் திரு நவ் தேஜ் சிங் சர்னா, மற்றும் அவரின் மனைவி அவினா சர்னா மற்றும் அவரின் சிறப்பு உதவியாளர் பிரதிக் மத்தூர் ஆகியோர் கொண்டாட்டங்களுக்காக வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்தது அறிய பண்புகளில் இருந்தது. சர்னா கூறுகையில் "இந்திய -அமெரிக்க" இடையேயான இரு நாட்டு உறவில் இது மிகச்சிறப்பான தருணம் " என்றார் . "உண்மை மிக நெருக்கமான, முன்பிருந்ததை விடவும் நெருக்கமான தருணம்" என அதை ஆமோதித்தார் ட்ரம்ப்.