சோனியாவின் அடிமையாக மாறிய உத்தவ் தாக்கரே! காவி சட்டை இல்லை; நெற்றியில் குங்குமம் இல்லை; சட்டசபையில் வந்தே மாதரம் இல்லை!

சோனியாவின் அடிமையாக மாறிய உத்தவ் தாக்கரே! காவி சட்டை இல்லை; நெற்றியில் குங்குமம் இல்லை; சட்டசபையில் வந்தே மாதரம் இல்லை!

Update: 2019-11-30 11:44 GMT

மகாராஷ்டிரா சட்டசபையில் இன்று (29.11.2019) ஓட்டெடுப்பு நடந்தது. முதல்வராக பதவியேற்றுள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.


இதற்காக சட்டசபைக்கு வந்த உத்தவ் தாக்கரே, வழக்கமாக தான் அணியும் காவி சட்டையை கழற்றி எறிந்துவிட்டு, மாற்று உடையில் வந்தார். அதைப்போல குங்குமம் இன்றி நெற்றி வெறிச்சோடி பாலைவனமாக காட்சியளித்தது. அவரது ருத்ராட்ச மாலையை யாருக்கு கொடுத்தாரோ தெரியவில்லை.


உத்தவ் தாக்கரே, தனது இந்துத்துவ அடையாளமான நெற்றியில் நீண்ட குங்கும நாமம், காவி சட்டை, ருத்திராட்ச மாலை இவைகளை எப்போதும் அணிந்து வலம் வந்தவர். ஆனால் இன்று அனைத்தையும் வீசிவிட்டார்.


அதேபோல மகாராஷ்டிரா சட்டசபையில், சபை நடவடிக்கையின்போது, வந்தே மாதரம் பாடப்படும். அதற்கும் இன்று விடை கொடுத்துள்ளார் இந்துத்துவ வீரரான பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே.


அதாவது சிவசேனா எப்படி சோனியாவின் சேனாவாக மாறியதோ, அதுபோல உத்தவ் தாக்கரே, சோனியாவின் முழு அடிமையாகவே மாறிவிட்டார்.


Similar News