தமிழகம் முழுவதிலும் பதுங்கியிருக்கும் மதபோதகர்கள் - அடுத்து என்ன நடக்கப்போகுதோ? அதிரடியில் இறங்கிய காவல்துறை!
தமிழகம் முழுவதிலும் பதுங்கியிருக்கும் மதபோதகர்கள் - அடுத்து என்ன நடக்கப்போகுதோ? அதிரடியில் இறங்கிய காவல்துறை!
தமிழகத்தில் விசா விதிமுறைகளை மீறி மதப்பிரச்சாரம் செய்து கொரோனா நோய் பரவ காரணமாக இருந்த வங்கதேசம், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்தை சேர்ந்த மதகுருமார்கள் உள்ளிட்ட 66 பேர் மீது தமிழக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அதில் 11 பேரை கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 738 பேரில் டெல்லியில் நடந்த மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள், தொடர்புடையவர்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என 679 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதன்கிழமை கொரோனா உறுதி செய்யப்பட்ட 48 பேரில் 42 பேர் டெல்லி சென்று வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்குள் புகுந்து சட்டத்தை மீறி மதப்பிரச்சாரங்களில் ஈடுபட்டதோடு 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் காலகட்டத்தில் தங்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிந்தும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மதப்பிரச்சாரம் மேற்கொண்டு நோய்த் தொற்று பரவ காரணமாக இருந்ததாக வங்கதேசம், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா நாட்டை சேர்ந்த தப்ளிக் மதகுருமார்கள், உடந்தையாக இருந்த தமிழகத்தை சேர்ந்தவர்கள் என மொத்தம் 66 பேர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி ஈரோட்டில் தாய்லாந்தை சேர்ந்த மதக்குருக்கள் 6 பேர் மீதும், செங்கப்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தங்கி மதப் பிரச்சாரம் செய்த இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த 4 பெண்கள் உள்ளிட்ட 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கிச்சிபாளையத்தில் மத பிரச்சாரம் செய்து வந்த 11 இந்தோனேசிய மதகுருக்கள் உள்ளிட்ட 16 பேர் மீதும், மதுரை மாவட்டம் மலைப்பட்டியில் தாய்லாந்தை சேர்ந்த 8 மதகுருக்கள் உள்ளிட்ட 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் பலர் சிகிச்சையில் இருப்பதால் உடல் நலம் சீரான பின்னர் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.