வங்கதேசத்தின் ஆதிக்கத்தை உடைக்கும் இந்தியாவின் "கலாதான்" ஸ்கெட்ச்..வங்க கடலுக்கே இனி நாங்கதான்..!
வங்கதேசத்தில் சீனாவின் போக்கு
இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையில் ஏற்பட்ட தாக்குதல் இயக்கு பிறகு பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வரும் எந்த ஒரு நாட்டையும் இந்தியா ஆதரிக்கவில்லை அதில் சீனாவும் வங்கதேசமும் அடங்கும். வங்கதேசத்தில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள இடைக்கால அரசு தொடர்ச்சியாக சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறது, அதோடு பஹல்காமில் தாக்குதல் நடந்ததற்கு இந்தியா பாகிஸ்தான் மீது பதில் தாக்குதலை நடத்திய பொழுது நாங்கள் வடகிழக்கு மாநிலங்களை கைப்பற்றுவோம் என வங்கதேசத்தில் இருக்கக்கூடிய ஒரு மூத்த அதிகாரி பேசியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது, முன்னதாக சீனாவுடன் பேசிய வங்கதேச மூத்த ஆலோசகர் சீன பயணத்தின் பொழுது வடகிழக்கு இந்தியாவோட முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி அதிக முதலீடுகளை ஈர்க்கிர வகையில பேசி இருந்த பேச்சும், நாங்கதான் வங்கதேசத்தோடு பாதுகாவலர்களாக இருக்கிறோம் என பேசி இருந்தார். இப்படி தொடர்ச்சியாக வங்கதேசம் வடகிழக்கு மாநில பகுதிகள் மீது அதிக கவனம் செலுத்துவதோடு தங்கள் ஆதிக்கத்தை அங்கு காட்டுவது போன்ற நிலைப்பாட்டையும் எடுத்து வருகிறது.
இதனால் வங்கதேசத்தை தவிர்த்து வடகிழக்கு மாநிலங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய கட்டாயத்திலும் இந்தியா இருந்து வருகிறது. அதனை தொடர்ந்தே தற்போது கலாதான் பல்முனை போக்குவரத்து திட்டம் பற்றிய பேச்சும் நடவடிக்கையும் வேகமெடுத்து உள்ளது. இந்த திட்டம் கடந்து 2008 ஆம் ஆண்டு மியான்மர் மற்றும் இந்தியாவிற்கிடையே ஏற்படுத்தப்பட்டது, மேலும் இந்த திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிகளும் தொடங்கப்பட்டது அதோடு வங்கதேசத்தை சாராமல் மியான்மரோடு இணைந்து எப்படி வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள பகுதிகளில் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிப்பது என்பதுதான் இந்த திட்டத்தின் சாரம்சமாக உள்ளது. சீனாவில் இருந்து அதிக முதலீடுகள் செல்வதாலும் வடகிழக்கு பிராந்தியத்தின் மீது வங்கதேசத்தின் பார்வை எப்பொழுதுமே இருந்து வருவதாலும் வடகிழக்கு பகுதிகளில் பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சிலிகுரி சிக்கல்
ஆனால் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் அதிக தாமதம் முன் சிக்கலும் இருப்பதற்கு காரணம் மிகவும் சிக்கலான இடங்களை இந்த திட்டம் உள்ளடக்கியுள்ளது. அதாவது மேற்கு வங்கத்தின் எல்லையாக உள்ள சிலிகுரி 22 கிமீ இடைவெளியில் வங்கதேசத்தின் எல்லையை ஒட்டியும் சீனாவின் எல்லையை ஒட்டியும் உள்ள பகுதியாகும் இதனால் மிகவும் அச்சுறுத்தல் அதிகம் உள்ள பகுதியாக சிலிகுரி உள்ளது. இது மட்டும் இன்றி வங்கதேசத்தின் மிகவும் பழமையான விமான தளமும் முதலாம் உலகப் போரின் பொழுது முக்கிய விமான தளபமாக இருந்த லால்முனிர் ஹாட் விமானத்தளம் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் அதை சுற்றி உள்ள பல வர்த்தகங்களில் சீனாவின் முதலீடு இருப்பதாகவும் கூறப்படுகிறது மேலும் இந்த விமான தளத்தை சீனா கைப்பற்றக் கூட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை சீனா இந்த விமான தளத்தை கைப்பற்றினால் சிலிகுரி பகுதியில் இருந்து வெறும் 108 கிலோமீட்டரில் இந்த விமான தளம் உள்ளது. இப்படி இக்கட்டான சூழ்நிலையில் தான் கலாதன் பல்முனை போக்குவரத்து திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.