Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லி தமிழர்கள் வாழும் பகுதிகளில் மக்கள் சபைக் கூட்டம் - அண்ணாமலைக்கு அமோக வரவேற்பு!

டெல்லி தமிழர்கள் வாழும் பகுதியில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது இதில் அண்ணாமலை கலந்து கொண்டார்.

டெல்லி தமிழர்கள் வாழும் பகுதிகளில் மக்கள் சபைக் கூட்டம் - அண்ணாமலைக்கு அமோக வரவேற்பு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 Dec 2022 3:44 AM GMT

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் டெல்லியில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தல் சார்பாக வேட்பாளர்களை அறிமுகம் செய்வதும் மற்றும் தமிழர்கள் அவர்களுக்கு தேவையான விஷயங்கள் என்னென்ன? போன்றவற்றை கேட்டறிந்து பா.ஜ.க சார்பில் களம் இறங்கும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகளை திரட்டி வருகின்றார். மேலும் வாக்குகளை திரட்டுவதற்காக பா.ஜ.க மகளிர் அணி குழுவினர் ஏற்கனவே டெல்லி சென்று பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டு உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.



இது தொடர்பாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இன்று புதுடெல்லி சிவாச்சாரியார்கள் சங்க உறுப்பினர்களை சந்தித்து உரையாடி, பின்னர் அவர்களுடன் உணவருந்தியது நெகிழ்வான தருணம். புதுடெல்லி மாநகராட்சி தேர்தலில், இன்று இரண்டு வார்டுகளில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் மக்கள் சபைக் கூட்டம் நடத்தி வேட்பாளர்களை அறிமுகம் செய்தோம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


மேலும் தென்னகப் பிரிவின் தலைவர் திரு முத்துசாமி, துணைத் தலைவர் திரு தண்டபாணி ஆகியோருடன் இணைந்து ஷக்கூர்பூர் வார்டு 62 கிஷன் பிமாட், இந்திரபுரி வார்டு 140 மோகன்லால் டைமா ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தோம். டெல்லியில் தமிழர்கள் வாழும் பகுதியில் மோடி தலைமையின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கிடைப்பதையும் உறுதி செய்வதாக" அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: Twitter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News