Kathir News
Begin typing your search above and press return to search.

திருமண மண்டபமே தீப்பற்றி எரியும் போது கூலாக சாப்பிடும் 2 விருந்தினர்: இணையத்தில் வைரல்!

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மாநகர் பீம்வாடி பகுதியில் கடந்த மாதம் 29ம் தேதி திருமணம் ஒன்று நடைபெற்றது. இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமண மண்டபமே தீப்பற்றி எரியும் போது கூலாக சாப்பிடும் 2 விருந்தினர்: இணையத்தில் வைரல்!

ThangaveluBy : Thangavelu

  |  1 Dec 2021 9:55 AM GMT

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மாநகர் பீம்வாடி பகுதியில் கடந்த மாதம் 29ம் தேதி திருமணம் ஒன்று நடைபெற்றது. இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் ஏராளமானோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதனை தொடர்ந்து விருந்தினர்கள் அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. அப்போது வரவேற்பு நடைபெற்ற இடத்தில் திடீரென்று தீ பற்றி எரியத் தொடங்கியது. இதனால் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் பதற்றமாக ஓடத் துவங்கினர்.

அந்த சமயத்தில் வந்திருந்த விருந்தினர்களில் இரண்டு பேர் மட்டும் எவ்வித பதற்றமும் இல்லாமல் தங்களின் இருக்கையில் அமர்ந்தபடி அசைவ உணவை ருசித்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். இது பற்றி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Source, Image Courtesy:Twiter


Next Story
கதிர் தொகுப்பு
Trending News