Kathir News
Begin typing your search above and press return to search.

ஆங்கிலேயர் காலத்தில் தனியாருக்கு விடப்பட்ட நிலம்: நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

ஆங்கிலேயர் காலத்தில் தனியாருக்கு வழங்கப்பட்ட நிலம் தொடர்பாக நீதிமன்றம் தரப்படுவது புதிய உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.

ஆங்கிலேயர் காலத்தில் தனியாருக்கு விடப்பட்ட நிலம்: நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  7 Dec 2022 3:56 AM GMT

ஆங்கிலேயர் காலத்தில் தனியாருக்கு வழங்கப்பட்ட பதிவு புதுப்பிக்கப்படாத நிலங்களை அடையாளம் கண்டு அவற்றை மீட்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே கூறுகிறது. எனவே மீட்கப்படாத நிலங்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் சி.எஸ்.ஐ அறக்கட்டளைக்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட 12.66 சாலை அமைப்பதற்காக அரசு கையகப்படுத்தும் நடவடிக்கை எடுத்தது. இதனை எதிர்த்து சிஎஸ்ஐ அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி பிறப்பை உத்தரவின் அடிப்படையில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தனிநபருக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் பெருமளவில் நிலங்கள் எழுதிக் கொடுக்கப்பட்டதாகும். அதாவது ஆவணங்கள் அடிப்படையில் எந்த சட்டபூர்வமான அதிகாரமும் இல்லாமல், குறைந்த தொகைக்கு வாடகை கொடுத்துவிட்டு அந்த நிலங்களை அவர்கள் அனுபவித்து வரலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.


இதன் மூலம் மக்கள் நலத்திட்டங்கள் அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக குறிப்பிட்ட நீதிபதி இதன் மூலம் தங்கள் காலத்தில் வழங்கப்பட்ட பதிவு புதுப்பிக்கப்படாத நிலங்களில் அடையாளம் கண்டு அவற்றின் மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. மேலும் அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என்று தான். அதில் சாலை அமைக்க அரசுக்கு எந்த தடையும் இல்லை என்று உத்தரவு வழங்கப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News