Kathir News
Begin typing your search above and press return to search.

காசுக்காக உய்க்குர் முஸ்லிம்களை சீனாவுக்கு திருப்பி அனுப்பும் தலிபான் ? - என்ன ஆனது 'இஸ்லாம் சகோதரத்துவம்' ?

தலிபான் தீவிரவாதிகள் உய்கர் சிறுமிகளை அழைத்துச் சென்றதாக தகவல்கள் வந்துள்ளன.

காசுக்காக உய்க்குர் முஸ்லிம்களை சீனாவுக்கு திருப்பி அனுப்பும் தலிபான் ? - என்ன ஆனது இஸ்லாம் சகோதரத்துவம் ?

Saffron MomBy : Saffron Mom

  |  4 Sep 2021 1:17 AM GMT

ஆகஸ்ட் 15 அன்று ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு, ஆப்கானிஸ்தானில் வாழும் உய்குர் முஸ்லிம்கள்கள் மத்தியில் பதற்றங்கள் அதிகரித்துள்ளது. பெரும் தொகை பணத்திற்காக அவர்கள் சீனாவுக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது.

தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் தற்போது சுமார் இரண்டாயிரம் உய்குர் முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். ரேடியோ ஃப்ரீ ஆசியாவின் அறிக்கையின்படி தலிபான் தீவிரவாதிகள் உய்கர் சிறுமிகளை அழைத்துச் சென்றதாக தகவல்கள் வந்துள்ளன.

சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத குழு அல்கொய்தா, "ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள மக்களை அமெரிக்க மேலாதிக்கத்தின் பிடியில் இருந்து விடுபட" அழைப்பு விடுத்தது, சீனாவின் சின்ஜியாங்கில் உள்ள உய்குர் முஸ்லிம்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து எதுவும் கருத்து சொல்லவில்லை.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வெற்றி பெற்றதற்கு அல்கொய்தா வாழ்த்து தெரிவித்ததுடன், காஷ்மீர், பாலஸ்தீனம், மக்ரெப் (வடமேற்கு ஆப்பிரிக்கா) ஆகியவற்றை "இஸ்லாத்தின் எதிரிகளின் பிடியிலிருந்து" விடுவிக்க உம்மா (உலகளாவிய இஸ்லாமிய சமூகம்) வருமாறும் அழைப்பு விடுத்தது. அல்கொய்தா, தலிபான்கள் மற்றும் பயங்கரமான ஹக்கானி நெட்வொர்க்குடன் தொடர்ந்து நெருங்கிய உறவுகளைப் பேணி வருகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

உய்குர்களை பிரிவினைவாதிகளாக சீனா கருதுகிறது. பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட உய்குர் முஸ்லீம் இனத்தவர்கள் 'மறு கல்வி முகாம்கள்' என்று அழைக்கப்படும் நாஜி பாணி வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சீனாவைப் பொறுத்தவரை கிழக்கு துர்கெஸ்தான் இஸ்லாமிய இயக்கம் (ETIM) என்ற ஒரு உய்குர் தீவிரவாதக் குழு தீவிர உள் அச்சுறுத்தலாக உள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்க தலிபான்களுக்கு ETIM போராளிகள் உதவினார்கள் என்று கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானுடனான சீனாவின் எல்லை வடகிழக்கு வாகான் மாவட்டத்தில் உள்ள படாக்ஷான் மாகாணத்தில் தொடங்குகிறது. ஜனாதிபதி அஷ்ரப் கானியின் கீழ் ஆப்கானிஸ்தான் ஜனநாயக ஆட்சியில் சீனாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அமெரிக்க படையினர் திரும்பப் பெறத் தொடங்கியவுடன், தலிபான்கள் சின்ஹியாங் பிராந்தியத்துடன் இணைந்துள்ள வடகிழக்கு படாக்ஷான் மாகாணத்தை தாக்கிக் கைப்பற்றினர்.

இதனால் அதன் எல்லையில் சீனா தனது மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டது. சின்ஜியாங்கில் சீனா கலாச்சார இனப்படுகொலையை செய்தது என்பது உலகிற்கு தெரியும். உய்க்குர் முஸ்லிம்களின் பெயர்கள், உணவுப் பழக்கங்கள், மதம், உடை, நடத்தைகள் மாற்றப்பட்டன. தொழிற்பயிற்சி மற்றும் வதை முகாம்கள் இன்றுவரை கடுமையான மனித உரிமை மீறல்களுடன் நடைபெற்று வருகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் உய்குர் போராளிகள் பலர் சிரியாவிற்கு சென்றனர், கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் அறிக்கைப் படி, ETIM இன் சுமார் 500 உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தானில், பெரும்பாலும் பதக்ஷான் மாகாணத்தின் ரெஜிஸ்தான் மற்றும் வார்டுஜ் மாவட்டங்களில் இருப்பதாக கணித்துள்ளனர்.

டிரம்ப் நிர்வாகம் கடந்த ஆண்டு ETIM அமைப்பை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கியது சீனாவிற்கு பெரும்கோபத்தை உண்டாக்கியது. 2014 ல் தொடங்கி, தலிபான் பிரதிநிதிகள் தவறாமல் சீனாவுக்கு வருகை தரத் தொடங்கினர். சின்ஜியாங்கின் தலைநகரான உரும்கியில் காபூலுக்கும் தலிபான்களுக்கும் இடையே சீனா இரகசியப் பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்தது.


Source: Samvada World

Next Story
கதிர் தொகுப்பு
Trending News