Kathir News
Begin typing your search above and press return to search.

கோதாவரி - காவேரி இணைப்பு திட்ட அறிக்கை இறுதி : மோடிக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிசாமி..!

கோதாவரி - காவேரி இணைப்பு திட்ட அறிக்கை இறுதி : மோடிக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிசாமி..!

ParthasarathyBy : Parthasarathy

  |  4 Jun 2021 6:32 AM GMT

பல தினங்களாக விவசாய மக்களின் கோரிக்கையாக இருக்கும் கோதாவரி-காவேரி இணைப்பு திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு இறுதி செய்து மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த திட்டத்தின் செய்தியை கேட்டறிந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மிகவும் மகிழ்ச்சி அடைந்து பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


அந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில் "விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரத்திற்கு பெரும் பயனளிக்கும் கோதாவரி–காவேரி இணைப்பு திட்டத்தின் கருத்துக்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் தேசிய நீர்வள முகாமை கேட்டறிந்து, விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்து மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது என்ற செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். நான் தமிழக முதலமைச்சராக இருந்த பொழுது, இத்திட்டத்தினை விரைவில் செயல்படுத்துமாறு பலமுறை மாண்புமிகு பிரதமர். நரேந்திர மோடி அவர்களுக்கு நேரிலும் கடிதம் மூலமும் வலியுறுத்தி கேட்டிருந்தேன். வரலாற்று சிறப்பு மிக்க இந்த திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்ட மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News