Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும் ! - புதிய ஆளுநருக்கு ராமதாஸ் வாழ்த்து !

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் 15-ஆவது ஆளுனராக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான ரவீந்திர நாராயண ரவி நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பா.ம.க. சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும் ! - புதிய ஆளுநருக்கு ராமதாஸ் வாழ்த்து !

ThangaveluBy : Thangavelu

  |  10 Sep 2021 5:27 AM GMT

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் 15-ஆவது ஆளுனராக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான ரவீந்திர நாராயண ரவி நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பா.ம.க. சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான ரவி அவர்கள் நமது அண்டை மாநிலமான கேரளத்தில் காவல்துறை அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றியவர் என்பதால், தமிழகத்தைப் பற்றி நன்கு அறிந்திருப்பார்.


தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி, சமூகநீதி, கல்வி, தமிழர் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றுக்காக தமிழ்நாடு அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழக அரசின் அத்தகைய நடவடிக்கைகளுக்கு புதிய ஆளுனர் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Pmk Founder Ramadoss

Next Story
கதிர் தொகுப்பு
Trending News