Kathir News
Begin typing your search above and press return to search.

அன்புடன் அழைத்த பெண்மணியின் வீட்டிற்கு சென்று தேநீர் தயாரித்த குஷ்பூ - பூரித்த மக்கள்!

அன்புடன் அழைத்த பெண்மணியின் வீட்டிற்கு சென்று தேநீர் தயாரித்த குஷ்பூ - பூரித்த மக்கள்!

Saffron MomBy : Saffron Mom

  |  25 March 2021 1:30 AM GMT

சென்னையை சேர்ந்த ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் குஷ்பூ அங்கு நாள் முழுவதும் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தி.மு.கவின் சார்பில் போட்டியிடும் டாக்டர் எழிலனை எதிர்த்து போட்டியிடும் அவர் அங்குள்ள பெண்களின் மனம் கவர்ந்த வேட்பாளர் ஆகி வருகிறார்.

நேற்று வாக்கு சேகரிக்க சென்ற அவரை தங்கள் வீட்டிற்கு தேநீர் அருந்த வருமாறு முஸ்தபா/சலீம் ரீட்டா காதல் தம்பதியினர் அன்புடன் அழைத்தனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அவர் அவர்களின் வீட்டுக்குச் சென்றார்.

வீட்டில் அமர்ந்து தேநீர் அருந்தி வராமல் அவரே சமையலறைக்குச் சென்று தானே மணக்க மணக்க தேனீர் செய்ய ஆரம்பித்தார். இதை அந்த வீட்டினரும் பத்திரிக்கையாளர்களும் மிகுந்த ஆச்சரியத்தோடு பார்த்தனர். தானே செய்த தேனீரை அனைவருக்கும் புன்முறுவல் பூத்த முகத்துடன் அளித்து அந்த பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.



ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பூ இல்லத்தரசிகளின் பிரியமான வேட்பாளராகி வருகிறார். தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நினைத்து வீட்டுக்கு வாங்க என்று உரிமையுடன் அழைப்பு விடுத்து வருகின்றனர். இதை ஏற்றுக்கொள்ளும் குஷ்பூவை அந்தத் தொகுதி மக்கள் பாராட்டி வருகிறார்கள். வரவேற்கும் மக்களின் பிரியமும் வாக்குகளாக மாறி தி.மு.கவின் கோட்டையாக கருதப்படும் ஆயிரம் விளக்கில் தாமரை மலருமா என்பது மே இரண்டாம் தேதி தெரிந்துவிடும்.

Image Credit: One India Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News