Kathir News
Begin typing your search above and press return to search.

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகன்

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகன்

ThangaveluBy : Thangavelu

  |  25 May 2022 7:39 AM GMT

குடிபோதையில் காரை ஓட்டி விபரத்து ஏற்படுத்திய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான ஹுகும் சிங் கரடவின் மகன் ரோஹிதாப் சிங் கடந்த சனிக்கிழமை இரவு செஹூர் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவருக்கு முன்னாடி சென்று கொண்டிருந்த தொழிலதிபர் தினேஷ் அஹுஜாவின் கார் மீது ரோஹிதாப் சிங் மோதினார்.

இதனிடையே காரை நிறுத்திய தொழிலதிபர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகனிடம் ஏன் இப்படி மோதி இருக்கின்றீர்கள் என கேள்வி எழுப்பினார். மேலும், காருக்கு நஷ்ட ஈடும் கேட்டார். அப்போது எம்.எல்.ஏ. மகன் குடிபோதையில் இருந்த ரோஹிதாப் சிங்கை செல்போனில் வீடியோ பதிவு செய்தார். இதன் பின்னர் காவல் நிலையத்தில் தொழில் அதிபர் தினேஷ் அளித்த புகாரின் பேரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குடிபோதையில் எம்.எல்.ஏ. மகன் விபத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Source, Image Courtesy: Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News