Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க. ஆதரவாளர்களை முடக்கலாம் என நினைத்தால் ஒரு போதும் நடக்காது: வானதி சீனிவாசன்!

பா.ஜ.க. ஆதரவாளர்களை முடக்கலாம் என நினைத்தால் ஒரு போதும் நடக்காது: வானதி சீனிவாசன்!

ThangaveluBy : Thangavelu

  |  1 Jun 2022 7:36 AM GMT

பா.ஜ.க. ஆதரவாளர்களை தொடர்ந்து கைது செய்வதன் மூலமாக பா.ஜ.க.வின் வளர்ச்சிக்குத்தான் உதவி செய்வதாக அமையும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., கூறியுள்ளார்.

பா.ஜ.க. தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடி பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு மாற்றங்களை செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார்.

அதன்படி தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் வாயிலாக பல்வேறு பயன்களை பெற்றுள்ளது. இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. பெண்கள் சொந்தமாக தொழில் செய்வதற்கு மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது.

இளைஞர்களுக்கு என்று தனி அமைச்சகமும் செயல்படுகிறது. அனைத்து துறைகளையும் ஊக்கப்படுத்தவும், முன்னேற்றவும் பிரதமர் மோடி உறுதுணையாக உள்ளார். ஆனால் தி.மு.க. வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த பின்னர் அதனை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. ஆளுங்கட்சி வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். ஆனால் மத்திய அரசு வாக்குறுதிகளைக் கொடுக்காமலேயே 2 முறை பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது.

மேலும், கார்த்திக் கோபிநாத் போன்றோர்கள் பா.ஜ.க. ஆதரவாளர்களை தொடர்ந்து கைது செய்வதன் மூலம் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு உதவி செய்கிறார்கள். சட்டத்திற்குட்பட்ட பொதுவெளியில் கருத்து கூறுபவர்களை இரவு நேரங்களில் தீவிரவாதிகளைப் போன்று கைது செய்வது மாநிலத்தின் கருத்து சுதந்திரமா? இது போன்ற செயல்களை பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எனவே இது போன்ற செயல்களினால் பா.ஜ.க. ஆதரவாளர்ளை முடக்கிவிடலாம் என்று நினைத்தால் அது பலிக்காது. இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.

Source, Image Courtesy: Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News