Kathir News
Begin typing your search above and press return to search.

அஞ்சலகத்தில் இந்த திட்டத்தின் கீழ் மாதம் ₹ 5,000 பெறலாம் - எப்படி?

அஞ்சல சேமிப்பு திட்டத்தின் கீழ் மாதம் ஐந்தாயிரம் பெறுவது எப்படி?

அஞ்சலகத்தில் இந்த திட்டத்தின் கீழ் மாதம் ₹ 5,000 பெறலாம் - எப்படி?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  26 Jun 2022 2:01 AM GMT

அனைவருக்குமே தற்போது சேமிப்பு பற்றிய மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம். ஏனெனில் ஒரு சிறிய வைரஸ் நம்முடைய அனைவரின் வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. சேவிங் செய்து வைத்த மக்கள் அனைவரும் அத்தகைய காலகட்டங்களில் மிகவும் நிம்மதியாக தங்களுடைய நாளை கடித்தார்கள் ஆனால் எந்த ஒரு பணம் இல்லாத அன்றாடம் மக்கள் அத்தகைய கால கட்டங்களில் மிகவும் கஷ்டத்தை அன்பு வைத்து விட்டார்கள். எனவே அத்தகையவர்களுக்கு தற்போது அஞ்சலகத்தில் இந்த சேமிப்பு திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


மாதாந்திர வருமான திட்டம் குறித்து ஒவ்வொரு முதலீட்டாளர்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே இது மாதாந்திர வருமானம் கிடைக்கும் திட்டத்தில் இணைந்து சுமார் 9 லட்சம் வரை டெபாசிட் செய்தால் அவர்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் 4,950 ரூபாயை வட்டியாக பெற முடியும். இதில் இருவர் சேர்ந்து தொடங்கும் சேமிப்பு கணக்குகளில் இத்தகைய சலுகைகளை பெறலாம் ஆனால் தனிநபர் ஒருவர் கணக்கு துவங்கும் பொழுது அதில் பாதி தொகையான 2,475 ரூபாயாக பெறமுடியும்.


MIS கணக்கைத் திறக்க விரும்பும் உள்ள நபர்கள் சுமார் குறைந்தபட்ச வயது தொகையான ஆயிரம் ரூபாயுடன் அஞ்சலக வழிகாட்டுதலின் கீழ் இந்த கணக்கை தொடங்க முடியும் அதன்படி அதிகபட்ச முதலீடு வரம்பு ஒன்றில் 4.5 லட்சம் ஆகவும் கூட்டு கணக்குகளுக்கு அதிகபட்சமாக 9 லட்சம் ஆகும். முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும் அதன் பிறகு நீங்கள் உங்கள் முதலீட்டு தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும.

Input & Image courtesy: News 18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News