Kathir News
Begin typing your search above and press return to search.

தென்னாப்பிரிக்க வீரர்களும் பந்தை சேதப்படுத்தினர்: ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் திடுக்கிடும் தகவல்!

2018 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா வீரர்களும் பந்தை சேதப்படுத்தினர் என்று ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் தகவல்.

தென்னாப்பிரிக்க வீரர்களும் பந்தை சேதப்படுத்தினர்: ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் திடுக்கிடும் தகவல்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  27 Oct 2022 2:31 AM GMT

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி கடந்த 2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியது. அதற்காக ஆஸ்திரேலிய வீரர் பார்ன் க்ராஃப்ட் உப்புத்தூள் கொண்டு பந்தை தேய்த்ததும், அதற்கு கேப்டன் சுமித், துணை கேப்டன் டேவிட் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை எடுத்து கேப்டனுக்கு ஒரு வருடமும், துணை கேப்டனுக்கு ஒன்பது மாதமும் விளையாட்டில் இருந்து தடை விதிக்கப்பட்டது. கேப்டன் பதவியையும் இழந்தார்.டிம் கென்னின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.


நான்காவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 492 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவிடம் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய வீரர் மட்டுமல்லாது தென்னாப்பிரிக்கா அணியின் வீரர்களும் பந்தை சேதப்படுத்திய யுக்தியை கையாண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை தற்போது கிளப்பியுள்ளார். அவர் எழுதிய புத்தகத்தில் இது பற்றி அவர் கூறுகையில், கேப்டன் டெஸ்டில் பான் கிராப்ட் பாக்கெட்டில் வைத்து உப்புத்தூளை எடுத்து பந்தை சேதப்படுத்திய காட்சி திரையில் பார்த்ததும் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து போனேன்.


கிரிக்கெட்டில் பந்தின் தன்மை மாற்ற முயற்சிப்பது நடக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் உப்புத்தூளை கொண்டு தேய்ப்பது வேறு மாதிரி. இது மாதிரி செய்யக்கூடாது என்று ஒட்டுமொத்த அணி வீரர்களின் ஆலோசனை கூட்டத்தில் எதுவும் விவாதிக்கப்படவில்லை. இந்த பிரச்சினையால் சுமித் மற்றும் வார்னர் ஆகியோர் அணியில் இருந்து விலக்கப்பட்டார்கள். அவர்களுக்கு அணி நிர்வாகம் ஆதரவாக இருக்க வேண்டும். ஆனால் தென்னாப்பிரிக்கா அணியினர் பந்தை சேதப்படுத்தி காட்சியை நான் பார்த்தேன். நான் பந்து வீச்சாளர் என்ற முறையில் நின்று கொண்டு இருந்தபோது, பிட் ஆப் திரையில் நின்ற ஒரு தென்னாப்பிரிக்கா வீரர் பந்து மீது இருந்த நூலை பிரித்து அதன் அளவில் கீறிடும் காட்சியை பார்த்தேன். ஆனால் அந்த ஒரு செயலை அம்பலப்படுத்திய டெலிவிஷன் இயக்குனர் இந்த காட்சியைத் தரையில் இருந்து உடனடியாக நீக்கிவிட்டார். இது குறித்து நடைபெற இடம் முறையிட்டேன். ஆனால் அவரும் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை இவ்வாறு தனது புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News