Kathir News
Begin typing your search above and press return to search.

பல்லி இறந்து கிடந்த குளிர்பானத்தை குடித்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதி !

பல்லி இறந்து கிடந்த குளிர்பானத்தை குடித்த 12 வயது சிறுவன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் அனுமந்த நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ், இவரது மனைவி மேனகா மற்றும் மகன் பிரதீப்புடன் வசித்து வருகிறார்.

பல்லி இறந்து கிடந்த குளிர்பானத்தை குடித்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதி !

ThangaveluBy : Thangavelu

  |  14 Sep 2021 1:23 PM GMT

பல்லி இறந்து கிடந்த குளிர்பானத்தை குடித்த 12 வயது சிறுவன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் அனுமந்த நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ், இவரது மனைவி மேனகா மற்றும் மகன் பிரதீப்புடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை பிரதீப் அதே பகுதியில் உள்ள பலசரக்கு கடைக்குச் சென்று கருப்பு கலர் குளிர்பானத்தை வாங்கிக் குடித்துள்ளார். இதன் பின்னர் குடித்து விட்டு கலர் பாட்டிலை பார்த்தபோது, பாட்டிலின் அடியில் பல்லி ஒன்று இறந்து கிடந்துள்ளதை பார்த்து சிறுவன் மயக்கமடைந்துள்ளார்.

இதனையடுத்து சிறுவனின் தாய் மற்றும் உறவினர்கள் உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. குளிர்பானத்தில் பல்லி இருந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Next Story
கதிர் தொகுப்பு
Trending News