Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க அரசை விமர்சிக்க முடியாத சங்கடத்தில் நெளியும் கார்த்திக் சிதம்பரம்!

தமிழக காங்கிரஸ் தற்போது இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாக கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தி.மு.க அரசை விமர்சிக்க முடியாத சங்கடத்தில் நெளியும் கார்த்திக் சிதம்பரம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 Sep 2022 2:49 AM GMT

தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருப்பதால், மேலும் ஆளும் கட்சியினை விமர்சனம் செய்ய முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலையில் காங்கிரஸ் இருப்பதாகவும், எனவே பொறுமையாக இருக்க வேண்டிய நேரம் என்றும் கார்த்திக் சிதம்பரம் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறி இருக்கிறார். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசில் அவர் தமிழக காங்கிரஸின் தற்போதைய நிலைமை பற்றி கூறுகிறார்.


கோவையில் விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் உரையாற்றும் பொழுது, அங்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் விமானநிலையத்திற்கு வந்து இறங்கினார்.அப்பொழுது பா.ஜ.க தொண்டர்கள் அவருக்கு உற்சாக வர வாய்ப்பு கொடுத்தார்கள். குறிப்பாக பாரத் மாதா கி ஜெய் என்று கோஷத்தையும் அவர்கள் எடுத்துக் கொண்டு இருந்தார்கள். மேலும் இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்டு செல்பி எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


பா.ஜ.க தலைவருக்கு தொண்டர்கள் கொடுக்கும் அத்தகைய கோஷங்களை பார்த்து கார்த்திக் சிதம்பரம் அவர்கள், ஆளும் கட்சியில் உள்ள நபர்களை விமர்சிக்க முடியாத ஒரு சூழ்நிலையில் காங்கிரஸ் இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார். எனவே அவர் தி.மு.கவிற்கு ஆதரவு கொடுப்பாரா? என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

Input & Image courtesy: Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News