Kathir News
Begin typing your search above and press return to search.

'இனி நம்ம ஆள்தான் வசூல் செய்வார்' - அதிகார போதையில் ஆட்டம் போடும் கோவை தி.மு.க மேயரின் கணவர்

கோவையில் மேயரின் கணவர் ஆடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இனி நம்ம ஆள்தான் வசூல் செய்வார் - அதிகார போதையில் ஆட்டம் போடும் கோவை தி.மு.க மேயரின் கணவர்

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 Aug 2022 2:00 AM GMT

"இனிமேல் நம்ம ஆட்கள் வசூல் செய்வார்கள் என்றும் நீங்கள் வசூல் செய்ய வேண்டாம்" என்றும் கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் கணவர் ஆனந்த்குமார் பேசும் செல்போன் ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றிபெற்ற பெண்களின் கணவர்கள் ஆட்சிப் பொறுப்பில் எந்தவிதமான தொடர்பும் இருக்கக்கூடாது. அப்படி தலையீடு ஏற்பட்டால் புகார் அளிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே மாநில அரசு கூறுகின்றது. அந்த வகையில் தற்போது கோவை மாநகராட்சி மேயர் கல்பனா என்பவரின் கணவரின் ஆடியோ பதிவு ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சந்தைக்கடை வசூல் தொடர்பாக அவருடைய உரையாடலில் கூறுகையில், குமார் என்பவருடன் பேசிக் கொண்டிருக்கிறார். "அடுத்த வாரத்திலிருந்து நம்ம ஆட்கள் சந்தைக் கடையில் வசூல் செய்து கொள்வார்கள்" என்றும் சொல்கிறார். அதற்கு எதிரில் பேசுபவர், "எங்களுக்குப் பிரச்னை இல்லை. நீங்கள் கோயில் கமிட்டியில் பேசிக்கொள்ளுங்கள்" என்கிறார். அதற்கு ஆனந்த், கோயில் கமிட்டியில் நாங்கள் பேசிக் பேசிக் கொள்கிறோம் என்று கூறுகிறார். நீங்கள் வசூல் பண்ண வேண்டாம் என்று சொல்கிறார்.


தொடர்ந்து மேயரின் கணவர் தான் தான் வசூலில் ஈடுபட போவதாகவும் கூறியிருக்கிறார். இது தொடர்பாக மேலும் தற்போது விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு தன்னுடைய கணவர் நல்ல நோக்கில்தான் அப்படிப்பட்ட வார்த்தைகளை கூறினார் என்று மேயர் சமாளித்திருக்கிறார். கேட்டால் கோவில் நிர்வாகிகள் வசூலை சரியாக செய்வது கிடையாது அதன் பேரில் தான் நானே வசூலில் ஈடுபட போவதாக அவ்வாறு கூறி இருக்கிறேன் மேலும் இதை தன்னுடைய மனைவியின் அரசியலுடன் சம்பந்தப்படுத்த வேண்டாம் என்று அவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Input & Image courtesy:Vikatan News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News