Kathir News
Begin typing your search above and press return to search.

நிலத்தை ஆட்டையை போட முயன்ற 8 மத பாதிரியார்கள் மீது வழக்கு!

நிலப்பிரச்சினை காரணமாக 8 மத பாதிரியார்கள் மீது வழக்கு போடப்பட்டு இருக்கிறது.

நிலத்தை ஆட்டையை போட முயன்ற 8 மத பாதிரியார்கள் மீது வழக்கு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  20 Nov 2022 4:16 AM GMT

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே துாத்துார் புனிதயூதா கல்லூரி அமைந்துள்ளது. இந்து கல்லூரிக்கு பின்புறம் உள்ள 17 ஏக்கர் நிலத்திற்கு தான் தற்போது பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது குறிப்பாக கல்லூரி பின்புறம் அமைந்துள்ள நிலத்தில் நாகர்கோவிலை சேர்ந்த அகமது ரசீது என்பவருக்கு சொத்து உரிமை ஆவணங்களை வருவாய்த்துறை வழங்கியது இதனால் அகமது போலீஸ் பாதுகாப்புடன் தனது சொத்தில் வேலி அமைத்தார். கல்லூரிக்கு பின்பக்கம் சொந்தமாக இருக்கின்ற நிலம் தங்களுக்கு தான் சொந்தம் என்று இக்கல்லூரியின் பாதிரியார்கள் உட்பட பலரும் கூறியிருக்கிறார்கள்.


இதனால் அந்த பகுதியை சேர்ந்த சிலர் வேலியை செய்தப்படுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பாக அகமது என்பவர் போலிஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்தார். அதன் பெயரில் தற்பொழுது 8 பாதிரியார் உட்பட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. போலீசார் சின்னதுரை சேர்ந்த ராஜு என்பவரை கைது செய்து இருக்கிறது.


இதனைத் தொடர்ந்து எட்டு பாதிரியாரும்இதனைத் தொடர்ந்து எட்டு பாதிரியாரும் நூற்றுக்கணக்கான மீனவ மக்களும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். 11 மணிநேரம் நடந்த போராட்டத்திற்கு பிறகு ராஜி என்பவர் விடுவிக்க செய்யப்பட்டார். போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பாதிரியார்களான துாத்துார் ஷாபின், சின்னத்துறை ஜிபு, மார்த்தாண்டம்துறை சுரேஷ்பயஸ், நீரோடி கிளீட்டஸ், இரவிபுத்தன்துறை ரெஜிஸ்பாபு, இரையுமன்துறை அஜித் ஜான் சுமேஷ், பூத்துறை பென்சி, வள்ளவிளை ரிச்சர்டு சகாரியஸ் உட்பட 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Input & Image courtesy: Dinamalar News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News