Kathir News
Begin typing your search above and press return to search.

தனியாருக்கு மட்டும் லாபம், அரசுக்கு மட்டும் நஷ்டமா? ஆவின் பால் விலை குறித்து அமைச்சர் நாசரின் விளக்கம்!

அரசு பால் நிறுவனங்கள் மட்டும் லாபத்தில் இயங்க வேண்டாமா என்று தமிழக அமைச்சர் நாசர் கேள்வி கேட்டு இருக்கிறார்.

தனியாருக்கு மட்டும் லாபம், அரசுக்கு மட்டும் நஷ்டமா? ஆவின் பால் விலை குறித்து அமைச்சர் நாசரின் விளக்கம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 Nov 2022 10:06 AM GMT

தீபாவளி பண்டிகை நாட்களில் செப்டம்பர் மாதம் ஆவின் நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் இனிப்புகளின் விலைகளை 20 ரூபாயிலிருந்து 80 ரூபாயாக விலை உயர்த்தி அறிவித்தது. அந்த ஒரு பெரும் சர்ச்சை ஆறுவதற்கு முன்பு அடுத்தது பால் விலை உயர்ந்தது. தமிழக மக்களின் ஒட்டுமொத்த கவனமும் ஆவின் பால் விலை உயர்வு நோக்கியிருந்தது. குறிப்பாக ஏழை மக்கள் இதன் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டார்கள். சிவப்பு நிற பால் பாக்கெட் லிட்டருக்கு 16 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக பற்றி எழுந்து இருக்கிறது. இது குறித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் இது பற்றி கூறுகையில், ஆவின் பால் விலை உயர்வு சாதாரண மக்களை பாதிக்காது. வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் பாலின் விலை தான் உயர்த்தப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.


குடும்ப தலைவிகள் தமிழகத்தில் ஆவின் பால் விலைகளை குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன் வைத்து வருகிறார்கள்.. மேலும் பல்வேறு கட்சிகளும் இந்த குற்றச்சாட்டுகளை பெரும் பொருளாக கையில் எடுத்து இருக்கிறது. இதாகவே குற்றச்சாட்டுகள் குறித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்களிடம் விகடன் செய்தி சார்பாக உரையாடுகையில் அவர் இது பற்றி விளக்கம் அளித்து இருக்கிறார். குறிப்பாக ஆவினில் ஆராய்ச்சி நிற பால் பாக்கெட் சாதாரண மக்களால் வாங்கப்படுவதில்லை. எனவே அதனுடைய விலை உயர்வு சாதாரண மக்களின் பாதிக்காது என்று அவர் கூறியிருக்கிறார். இருந்தாலும் எப்படி பார்த்தாலும் மற்ற மாநிலங்களை காட்டிலும் ஒரு லிட்டர் பாலின் விலை 10 ரூபாய்க்கு குறைவாகவே தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.


மேலும் தனியார் பால் நிறுவனங்கள் லாபத்தில் இயங்க வேண்டும். அரசும் நிறுவனங்கள் மட்டும் நட்டத்தில் இயங்க வேண்டுமா? என்று அவர் ஒரு கேள்வியும் எழுப்பி இருக்கிறார். மேலும் இனிமேல் வெளியற்றும் இருக்காது என்று அவர் தன்னுடைய பேட்டியில் முடித்துக் கொண்டு இருக்கிறார்.

Input & Image courtesy: Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News