உலக போர் சூழல்!! இந்தியா ஆயுத தொழிற்சாலையாக மாறுகிறது!!
By : Bharathi Latha
Update: 2026-01-31 11:47 GMT
உலகம் முழுவதும் போர் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா ஆயுத தொழிற்சாலையாக மாறி வருகிறது. இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவுடன் கூட்டு ஆயுத உற்பத்தி ஒப்பந்தங்களை மேற்கொள்ள தயாராகி வருகின்றன.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இந்தியா மற்றும் ஜெர்மனியுடன் ஆயுத உற்பத்தி ஒப்பந்தங்களை மேற்கொள்ள தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸ் குழு ஒன்று இந்தியாவிற்கு வருகை தந்து, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் ஆயுத உற்பத்தி குறித்து விவாதிக்க உள்ளது.
இந்தியா தற்போது அமெரிக்காவிற்கு ஏராளமான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பீரங்கி குண்டுகளை வழங்கி வரும் நிலையில் பல அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்கள் இந்தியாவில் ஆயுத உற்பத்தியை ஊக்குவித்து வருவதாக கூறப்படுகிறது.