இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் முக்கிய அறிவிப்புகள்!!
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்தது அமெரிக்கா.
அமெரிக்காவிடம் சுமார் ₹42 லட்சம் கோடி மதிப்பிலான கொள்முதல் செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியா அமெரிக்காவுக்கு எந்த முதலீட்டு உறுதிமொழியும் அளிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியா இறக்குமதி செய்யலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் விமானங்கள் மட்டும் 70-80 பில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும்.
சட்டப்பூர்வமான ஒப்பந்தம் மார்ச் மாத நடுப்பகுதியில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறோம். இந்த ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய வாய்ப்புகளைத் திறக்கும். விவசாயிகள், MSME, மீனவர்களுக்கு பயனளிப்பதாக பியூஷ் கோயல் கூறினார்.