விவேக் மரணத்துக்குப் பிறகு அவர் மனைவியின் முதல் செய்தியாளர் சந்திப்பு!

Update: 2021-04-18 12:46 GMT

தமிழ் சினிமாவின் சின்ன கலைவாணர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நடிகர் விவேக். அவர் நேற்று காலமான நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்தநிலையில் விவேக்கின் மனைவி அருள்செல்வி, கணவரின் மறைவிற்கு பின் முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது அவர் கூறியது: என் கணவரை நான் இழந்து நிற்கும் இந்த நேரத்தில் எங்கள் குடும்பத்திற்கு பக்கபலமாகவும் ஒரு மிகப்பெரிய துணையாகவும் நின்ற மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் எங்கள் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றி.


மேலும் என் கணவருக்கு அரசு மரியாதை கொடுத்ததற்கு மிக்க நன்றி. அதை என்றும் நன்றியோடு நினைத்துப் பார்ப்போம், நீங்கள் கொடுத்தது என் கணவருக்கு மிகப்பெரிய கவுரவம். அடுத்து காவல்துறை சகோதரர்களுக்கு மிக்க நன்றி. கடைசி வரைக்கும் நீங்கள் எங்களுடன் நின்றீர்கள், ரொம்ப ரொம்ப நன்றி. ஊடகத்துறையில் இருக்கும் சகோதரர்கள் அனைவருக்கும் எனது நன்றி. நேற்று என் கணவரின் இறுதி ஊர்வலத்தில் கடைசி வரைக்கும் வந்த அவருடைய கோடான கோடி ரசிகர்களுக்கு என்றும் எங்கள் நன்றி என விவேக் மனைவி அருள்செல்வி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News