கொரோனாவில் இருந்து மீண்ட பிரபல நடிகை! இரண்டு குழந்தைகளுக்கு தாயாக குறையாத தன்னம்பிக்கை!

Update: 2021-05-01 12:08 GMT

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை சமீரா ரெட்டி குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகை சமீரா ரெட்டி, 2006ஆம் ஆண்டில் வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் வேட்டை, அசல், வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சமீரா இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் வங்க மொழி படங்களிலும் நடித்துள்ளார். 2014ஆம் ஆண்டு தொழிலதிபர் அக்‌ஷய் வர்தேவை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலானார். இவருக்கு ஹான்ஸ் என்கிற மகனும் நைரா என்கிற மகளும் உள்ளனர். இந்நிலையில் சமீரா ரெட்டி, அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டாக்டர்களின் அறிவுரைகளைப் பின்பற்றி சிகிச்சை எடுத்து வருவதாக சமீரா ரெட்டி ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்த சமீரா ரெட்டி, தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு இருப்பதாக கூறி இருக்கிறார்.

Similar News