கொரோனோ பாதிப்பால் இறந்த சினிமா தயாரிப்பாளர் - தொடரும் சோகம்!

Update: 2021-05-03 11:30 GMT

கொரோனோ இரண்டாம் அலை தமிழகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் தாக்கத்தால் பல உயிர்பலி ஏற்படும் நிலையில் இதற்கு சினிமா பிரமுகர்'களும் தப்பவில்லை. கடந்த வாரம் இயக்குனர் தாமிரா, ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த் ஆகியோர் மரணமடைந்த நிலையில் தயாரிப்பாளர் முத்துக்குமரன் கொரோனோ தொற்றால் மரணமடைந்துள்ளார்.

அவருக்கு வயது 47, இவர் தமிழில் குழந்தை வேலப்பன் இயக்கத்தில் கிருஷ்ணா நடித்து வெளியான படம் "யாக்கை" இப்படத்தின் தயாரிப்பாளர் முத்துக்குமரன் சுப்பிரமணியன் ஆவார்.


இவர் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி முத்துக்குமரன் நேற்று காலமானார். மறைந்த முத்துக்குமரனுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

Similar News