பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ்க்கு கொரோனோ தொற்று உறுதி!

Update: 2021-05-07 07:30 GMT

நடிகர் பாக்கியராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்கியராஜ் ஆகிய இருவருக்கும் கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனோ இரண்டாம் அலை மிக வேகமாக பரவுகிறது. நாட்டில் பல மாநிலங்களில் முழு லாக் டவுன் அறிவிக்கப்பட்ட வேளையில் தமிழகத்தில் மட்டும் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இதன் தீவிரத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனோ எண்ணிக்கை கூறுகிறது. இதனயடுத்து திரையுலகில் புகழ் பெற்ன இயக்குனர் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது.

நடிகர் பாக்கியராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்கியராஜ் ஆகிய இருவருக்கும் கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பாக்கியராஜ் மகன் சாந்தனு பாக்கியராஜ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.


மேலும் சாந்தனு'வும் அவரது மனைவியும் தனிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனோ எண்ணிக்கையை கட்டுப்படுத்த தேவை முழு லாக்டவுன் என அனைவரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

Similar News