"சிவகார்த்திகேயன் மாதிரி ஜாலியான படம் பண்ணனும்" - விஜய் ஆண்டனியின் ஆசை!

Update: 2021-05-07 07:45 GMT

"நான் லவ் பன்ற மாதிரி கதை இருந்தா எடுத்துகிட்டு வாங்க"ன்னு இயக்குனர்கள்கிட்ட சொல்லியிருக்கேன் என்கிறார் கதாநாயகன் விஜய் ஆண்டனி.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தமிழில் 'சுக்ரன்' படம் மூலம் அறிமுகமானார். குறுகிய காலங்களில் தமிழ் திரையுலகில் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறினார். பின்னர் கதாநாயகனாக 'நான்' என்கிற படம் மூலம் அறிமுகமாகினார். படம் வெற்றி பெறவே தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வருகிறார்.


தற்பொழுது 'கோடியில் ஒருவன்' படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. ஒரு பத்திரிக்கைக்கு இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

"நானும் ஹீரோயின்கள் கூட ரொமான்ஸ் பண்ணனும், லவ் படங்கள்ல நடிக்கணும்னுதான் ஆசைப்படுறேன். ஆனா எனக்கு கதை சொல்லும் போதெல்லாம் 'இதுதான் சார் உங்க பிரச்னை. இதை நீங்க எப்படி சமாளிக்கிறீங்க ங்கிறதுதான் படம்'னு சொல்லிடுறாங்க.

அந்தப் பிரச்னைகளை சமாளிப்பேனா... இல்லை, லவ் பண்ணுவேனா சொல்லுங்க. முதல் படத்துல இருந்து இப்போ வரை நான் லவ் பண்றதுக்கான ஸ்பேஸ் குறைவா இருக்கு. இந்த பேட்டி மூலமா இயக்குநர்களுக்கு சொல்றது என்னன்னா, நான் லவ் பண்ற மாதிரி கதைகள் இருந்தா எடுத்துட்டு வாங்க.

சிவகார்த்திகேயன் மாதிரி ஜாலியான படங்கள் பண்ணணும்னு நினைக்கிறேன்." என்று கூறியிருக்கிறார்.

Similar News