"மஹா" திரைப்படத்தை வெளியிட தடையில்லை - தயாரிப்பாளர் தரப்பு விளக்கம்..

Update: 2021-05-21 08:45 GMT

"எங்கள் படத்திற்கு தடை இல்லை, நல்ல பிரம்மாண்ட முறையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்" என சிம்பு, ஹன்சிகா மோத்வானி நடித்த 'மஹா' படத்தின் தயாரிப்பாளர் தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.


அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "மஹா படத்தின் அனைத்து பணிகளும் முழுவதுமாக முடிந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இயக்குநர் தரப்பில் இருந்து தயாரிப்பு தரப்பு மீது சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டு மே 13ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையின் போது மஹா படத்தின் மீது உயர்நீதிமன்றம் எந்த ஒரு தடையும் இதுவரை பிறப்பிக்கவில்லை. உயர்நீதிமன்றம் சார்பில் வழக்கு குறித்து இயக்குநர் தரப்பு வழக்கறிஞர் வாயிலாக சட்டபூர்வ அறிவிப்பு கடிதம் பெறப்பட்டது. அதில் வழக்கின் அடுத்த விசாரணை 19ஆம் தேதி அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


எங்கள் தரப்பில் உடனடியாக வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியம் வாயிலாக பதில் பிரமாண பத்திரம் 18ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை 19 அன்று எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மஹா படத்தின் எந்த ஒரு தடையும் இதுவரை பிறப்பிக்கவில்லை.


மேலும் தற்போதைய பொது முடக்க காலத்தில் பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு 'மஹா' படத்தின் வெளியீட்டு தேதியை சரியான நேரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளோம்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News