தான் குடி பழக்கத்தை நிறுத்தி ஓராண்டு காலம் ஆவதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
மாநாடு படக்குழுவினர் டுவிட்டர் ஸ்பேஸில் கலந்துரையாடினர். அதில் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா இயக்குனர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோர் அடங்கிய படக்குழுவினர் கலந்துகொண்டனர். மேலும் பிரேம்ஜி போன்றோர் உடன் இருந்தும் கூட குடிக்காமல் இருந்தது மிகப் பெரிய விஷயம் என நகைச்சுவையாக கூறினார்.
மாநாடு திரைப்படத்தில் தாங்கள் கடினமாக பணியாற்றியதற்கு மக்களும் ரசிகர்களும் நல்ல மரியாதை கொடுப்பார்கள் என்று சிலம்பரசன் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.