கர்ணனை விட 'ருத்ரதாண்டவம்' இரு மடங்கு வரவேற்பை பெறும் - ராதாரவி!

Update: 2021-09-24 03:30 GMT

இயக்குனர் மோகன் ஜி இயக்கி உள்ள 'ருத்ர தாண்டவம்' திரைப்படம் வருகிற அக்டோபர் 1-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


இந்நிலையில் 'ருத்ரதாண்டவம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. இதில் இயக்குனர் மோகன்ஜி, ராதாரவி, நடிகை தர்ஷா குப்தா, இசையமைப்பாளர் ஜுபின், கலை இயக்குனர் ஆனந்த், விளம்பர வடிவமைப்பாளர் பிரவீன், நடிகர் ஜே.எஸ்.கே கோபி, படத்தொகுப்பாளர் தேவராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


அப்போது பேசிய ராதாரவி கூறியதாவது, "இந்தப்படத்தில் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை. எது நியாயமானதோ அதை இயக்குனர் பேசியிருக்கிறார். இந்தப் படம் சிறப்பான படம். அனைவருக்கும் பொதுவான படம். படம் 1ஆம் தேதி வெளியான பிறகு, இதுதான் டாக் ஆஃப் த டவுனாக இருக்கும். தனுஷ் நடித்ததால் கர்ணன் படம் மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. ருத்ர தாண்டவம் படம் ரிச்சர்ட் நடித்ததால் இரண்டு மடங்கு வரவேற்பைப் பெறும்" என்றார்.

Similar News