இயக்குனராக ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படம் துவங்குவது பற்றி மகேஷ் பாபு அறிவித்துள்ளார்.
இயக்குனர் ராஜமௌலி தற்பொழுது ஆர்.ஆர்.ஆர் பட வேலைகளில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். இதனையடுத்து இவர் அடுத்தபடியாக பான் இந்தியா படமாக மகேஷ்பாபுவை வைத்து படம் இயக்கவுள்ளார்.
மகேஷ்பாபு, ராஜமௌலி இணையும் முதல் படமாகும் இது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு 2022'ல் தொடங்கும் என மகேஷ் பாபு குறிப்பிட்டுள்ளார்.