துபாயில் தீபாவளி கொண்டாடியுள்ளார் நடிகர் மோகன்லால்.
கடந்த வருடம் தான் துபாய் டவுன்டவுனில் 51 அடுக்குகள் கொண்ட கட்டடம் ஒன்றில் புதிய பிளாட் வாங்கினார் மோகன்லால். அதன் காரணமாக இந்த ஆண்டு அங்கு தீபாவளி கொண்டாட முடிவெடுத்தால் மோகன்லால். இதனால் இந்த ஆண்டு தீபாவளியை துபாய் புதிய வீட்டில் சந்தோஷம் பொங்க கொண்டாடியுள்ளார் மோகன்லால்.
அதுமட்டுமல்லாமல் துபாயில் அன்றைய தினம் துபாயில் தங்கியுள்ள சஞ்சய் தத் வீட்டிற்கு சென்று அவருடன் சேர்ந்து சில மணி நேரங்கள் மகிழ்ச்சியாக செலவிட்டுள்ளார் மோகன்லால். புற்றுநோய் சிகிச்சை பெற்று சஞ்சய்தத் ஓய்வெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.