பான் இந்தியா படமான புஷ்பா தமிழில் லைகா வசம்

Update: 2021-11-22 13:30 GMT

புஷ்பா'வை லைகா நிறுவனம் தமிழில் வெளியிடுகிறது.




 


இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் புஷ்பா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 5 மொழியியில் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.




 


வருகிற டிசம்பர் 17'ம் தேதி இதன் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் புஷ்பா படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த தகவலை தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

Similar News