இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகனாக உயர்ந்துள்ளார் பிரபாஸ்.
'பாகுபலி' படங்களின் இரண்டு பாங்களும் வந்த பிறகு பிரபாஸ் சம்பளமும், மார்க்கெட்டும், இமேஜும் இந்திய அளவில் உயர்ந்தது. தற்சமயம் மற்ற தெலுங்கு நடிகர்களைக் காட்டிலும், ஏன் இந்திய நடிகர்களைக் காட்டிலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்துள்ளார் பிரபாஸ்.
தற்போது வெளியாகவிருக்கும் 'ஆதி புருஷ்' படத்திற்கே அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. தற்போது 'ஸ்பிரிட்' படத்திற்கும் 150 கோடி ரூபாய் சம்பளம் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் 100 கோடிக்கும் அதிகமான சம்பளம் வாங்கும் ஹிந்தி நடிகர்களான சல்மான்கான், அக்ஷய் குமார் ஆகியோரை விடவும் பிரபாஸ் அதிக சம்பளம் பெறுகிறார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.