ரசிகர்களுக்காக புனித் ராஜ்குமாரின் வாழ்கை படமாகிறது !

Update: 2021-11-25 11:45 GMT

புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை சினிமாவாக எடுக்க இருக்கிறார்கள் பிரபல தயாரிப்பாளர்கள்.




 


கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். கடந்த அக்டோபர் 29'ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மரணம் அடைந்தார். புனித் ராஜ்குமாரின் மறைவு அனைத்து தரப்பிலும் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பல ரசிகர்கள் இன்னமும் அவருக்காக உருகி பிராத்தனை செய்து வருகின்றனர் அவர் நினைவாக.




 


இந்நிலையில் அவரது வாழ்க்கை திரைப்படமாக தயாராக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதற்கு பதில் அளித்துள்ள கன்னட சினிமாவின் முன்னணி இயக்குனரான சந்தோஷ் ஆனந்த்ராம், புனித் ராஜ்குமாரின் வாழ்க்கையை திரைக்கு கொண்டு வர என்னால் இயன்ற முயற்சிகளை செய்வேன் என்று கூறியிருக்கிறார். விரைவில் இதன் பணி துவங்கும் என தெரிகிறது.

Similar News