'தயாரிப்பாளர்' கீர்த்தி சுரேஷின் 'வாஷி' படப்பிடிப்பு துவக்கம் !

Update: 2021-11-30 11:15 GMT

கீர்த்தி சுரேஷ் சொந்த தயாரிப்பில் உருவாகும் 'வாஷி'யின் படப்பிடிப்பு துவங்கியது.




 


தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகி கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக மலையாளத்தில், தனது குடும்பத்தின் சொந்த தயாரிப்பில் உருவாகும் 'வாஷி' (கோபம்) என்கிற படத்தில் நடிக்கிறார். டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கிறார் . கீர்த்தியின் பள்ளிக்கால தோழர் விஷ்ணு ராகவ் இயக்குகிறார்.




 


இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது, இது தொடர்பாக கீர்த்தி சுரேஷ் கூறுகையில், "ஒரு மகளாக தந்தையின் தயாரிப்பில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கும் இருந்தது. ஏழு வருடங்களுக்கு பிறகு எனது கனவு இப்போதுதான் நனவாகி உள்ளது" என கூறியுள்ளார்.

Similar News