சாய்னா நேவால் குறித்து சர்ச்சை பதிவு: சித்தார்த் மீது வழக்குப்பதிவு!

Update: 2022-01-13 06:09 GMT

இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து மிகவும் ஆபாசமான முறையில் ட்விட்டரில் கருத்து கூறிய நடிகர் சித்தார்த் மீது ஐதராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவுக்காக பேட்மின்டன் போட்டியில் பல்வேறு தங்கப்பதக்கங்களை வாங்கியவர் சாய்னா நேவால். இவர் சமீபத்தில் பிரதமருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு எதிர் கருத்து கூறுவதாக நடிகர் சித்தார்த் மிகவும் ஆபாசமான முறையில் கருத்தை பதிவு செய்திருந்தார். இவரது கருத்துக்கு பெண்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும், தேசிய மகளிர் ஆணையமும் சித்தார்த் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், நடிகர் சித்தார்த் மீது ஐதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ஐதராபாத் போலீசார் கூறியதாவது: சாய்னா நேவால் பற்றி அவதூறு பதிவு வெளியிட்டதாக சித்தார்த் மீது பிரேனா என்ற பெண் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் சித்தார்த் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

Source: Polimer

Image Courtesy:IBTimes India

Tags:    

Similar News