ஏறுமுகத்தில் இருக்கும் சிம்புவின் அடுத்த படம் பற்றிய அசந்தல் அப்டேட்

Update: 2022-01-20 13:15 GMT

சிம்புவை இயக்க தற்பொழுது பல இயக்குனர்கள் போட்டி போடும் நிலையில் அடுத்த படத்தை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.




 


'மாநாடு' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு சிம்புவின் திரையுலக பயணம் ஏறுமுகத்தில் உள்ளது. தற்பொழுது கவுதம் வாசுதேவ் மேனனின் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வரும் சிம்பு அடுத்தபடியாக பத்து தல, கொரோனோ குமார் படத்தில் நடித்து வருகிறார். அனைத்து படங்களும் முடியும் தருவாயில் உள்ள நிலையில் அடுத்ததாக எந்த படத்தில் நடிப்பார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அதற்கான தகவல் வெளியாகியுள்ளது.




 


அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் 'ஓ மை கடவுளே' படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு அடுத்தபடியாக நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளன. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Similar News