கதாநாயகனாக நடிக்கும் சந்தானம் முதன் முறையாக கன்னட இயக்குனருடன் புதிய படம் ஒன்றில் இணையவிருக்கிறார்.
சமீபத்தில் வெளியாகிய சந்தானத்தின் 'டிக்கிலோனா' ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியடைந்தது. நடுவில் சில படங்கள் கால தாமதமாக வெளிவந்த காரணத்தினால் சரியாக போகவில்லை. இந்நிலையில் தனது அடுத்த படத்தை கண்டிப்பாக வெற்றிப்படமாக்க சந்தானம் கடும் முயற்சி எடுத்து வருகிறார்
இதன் தொடர்ச்சியாக கன்னட இயக்குனர் பிரஷாந்த் ராஜு இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சந்தானம். கன்னடத்தில் லவ்குரு, ஆரஞ்ச் என வெற்றிப்படங்களை இயக்கிய இவரின் இயக்கத்தில் சந்தானம் காமெடி கலந்த ரொமான்டிக் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.