இரண்டாவது முறையாக கொரோனா தொற்றுக்கு உள்ளான சிரஞ்சீவி - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Update: 2022-01-27 00:30 GMT

தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி'க்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.




 


தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தற்பொழுது 'ஆச்சார்யா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு தமிழில் அஜித் நடித்த வேதாளம் படத்தின் மறுபதிப்பாகிய என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். பரபரப்பாக படப்பிடிப்பில் இயங்கிகொண்டிருந்த சிரஞ்சீவி'க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.




 


கொரோனா தொற்று ஏற்பட்ட உடன் வீட்டில் தனிமை படுத்திக்கொண்டார். மேலும் கடந்த வருடம் நவம்பர் மாதமும் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Similar News