பார்வதியுடன் இணைந்த பிரியா பவானி சங்கர்

Update: 2022-03-11 13:00 GMT

பிரியா பவானி சங்கர் புதிய வெப்சீரிஸ் ஒன்றிற்காக மலையாள நடிகை பார்வதியுடன் இணைந்துள்ளார்.




யாவரும் நலம், 24 உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விக்ரம் குமார் தற்போது தெலுங்கில் நாக சைதன்யா நடிப்பில் 'தேங்க்யூ' என்ற படத்தை இயக்கி முடித்து விட்டார், மீண்டும் அதே நாகசைதன்யாவுடன் சேர்த்து தற்போது வெப்சீரிஸ் ஒன்றை இயக்கவிருக்கிறார்.




 


இந்த வெப்சீரிஸ்'ல் கதாநாயகியாக ஏற்கனவே நடிகை பார்வதி இணைந்து விட்டார். தற்போது பிரியா பவானி சங்கர் இந்த வெப்சைட்டில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார், இதன் படப்பிடிப்பு தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் புகைப்படத்தை பிரியா பவானி சங்கர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

Similar News