வருகிறது ஷாருக்கானின் ஓடிடி நிறுவனம்

Update: 2022-03-16 07:00 GMT

பாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான ஷாருக்கான் புதிதாக ஓடிடி நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளார்.




தற்பொழுது தொழில்நுட்ப வளர்ச்சியின் பரிணாமம் காரணமாக திரையுலகம் ஓடிடி என்ற தளத்தை படங்கள் வெளியீட்டிற்காக பயன்படுத்தி வருகிறது, இதனால் சிறிய அளவில் தயாரிக்கப்பட்ட படங்கள், திரையரங்குகளில் இடம்பெற முடியாமல் போன படங்களும் ரசிகர்களிடையே சென்றடையும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் ஓடிடி தளங்களுக்கு ரசிகர்கள் மத்தியிலும், படைப்பாளிகள் மத்தியிலும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.




இந்நிலையில் பாலிவுட் முன்னணி நடிகரான ஷாருக்கான் சொந்தமாக ஓடிடி நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளார். இதுபற்றி குறிப்பிடும்பொழுது "ஓடிடி இவ்வுலகில் ஏதோ ஒன்று நடக்கப் போகிறது" என்ற வார்த்தைகளுடன் எஸ்.ஆர்.கே பிளஸ் என்ற லோகோவையும் இணைத்து தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் ஷாரூக். ஏற்கனவே ஷாருக்கான் ரெட்சில்லீஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருவதும் மற்றும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News