இன்றுடன் நூற்றாண்டு விழா காணும் இசை சக்கரவர்த்தி 'டி.எம்.எஸ்'

Update: 2022-03-24 08:00 GMT

பாடல் உலகின் சக்கரவர்த்தி டி.எம்.சௌந்தரராஜன்'னின் நூறாவது பிறந்த நாள் இன்று பலரால் நினைவு கூரப்பட்டு அனுசரிக்கப்படுகிறது.




 


'பாட்டும் நானே பாவமும் நானே..' என தன் குரலில் பாடலையும் பலவித பாவனைகளில் கொடுத்து இசை ரசிகர்களை இன்றும் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் டி.எம்.எஸ் எனப்படும் டி.எம்.சௌந்தரராஜன், மதுரையில் பிறந்து தன் குரலால் தமிழ் ரசிகர்களை மயக்கி வரும் டி.எம்.எஸ் கிட்டத்தட்ட ஏறத்தாழ 35 ஆண்டுகள் தமிழ் திரையுலக பாடலில் ஆதிக்கம் செலுத்தினார்.




இன்று அவரின் 100 வது பிறந்த நாள் ஆகும், டி.எம்.எஸ்'ஸின் இந்த 100'வது பிறந்தநாளை முன்னிட்டு பல இசையமைப்பாளர்கள், பாடகர்கள் போன்ற திரைத் துறையைச் சேர்ந்த கலைஞர்கள் டி.எம்.எஸ் அவர்களை நினைவுகூர்ந்து தங்கள் நினைவுகள் மற்றும் அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர்.

Similar News