வெங்கட்பிரபுவின் அடுத்த ஹீரோ நாகசைதன்யா - மாநாடு ரீமேக்'க்கா

Update: 2022-04-06 12:04 GMT

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.




'மாநாடு' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் வெங்கட்பிரபு 'மன்மதலீலை' என்ற படத்தை இயக்கி இருந்தார், தற்போது அந்த திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்தபடியாக எந்த நடிகரை வைத்து இயக்குனர் வெங்கட்பிரபு படம் இயக்குவார் என எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தெலுங்கில் நாகார்ஜுனா மகனும், இளம் நடிகருமான நாகசைதன்யா வின் படத்தை வெங்கட்பிரபு இயக்கவிருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




நாக சைதன்யாவின் 22'வது படமாக உருவாகும் இப்படத்தில் அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகும் இப்படத்தின் தலைப்பு மற்றும் பிற நட்சத்திரங்களின் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News