சுந்தர்.சி'யின் வில்லனாக அனுராக் காஷ்யப்

Update: 2022-04-16 07:00 GMT

இயக்குனர் சுந்தர்.சி நடித்துவரும் புதிய படத்தில் பிரபல இந்தி திரையுலக இயக்குனர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.




 


இந்தி திரையுலகில் பிரபலமான இயக்குனர் அனுராக் காஷ்யப் இவர் தமிழில் நயன்தாராவின், 'இமைக்கா நொடிகள்' படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் நடிக்கவில்லை இந்தநிலையில் இயக்குனர் சுந்தர்.சி நடிப்பில் உருவாகிவரும் 'ஒன் டூ ஒன்' என்ற என்ற படத்தில் மீண்டும் தமிழ் திரையுலகத்திற்கு வில்லனாக நடிக்க வருகிறார் இயக்குனர் அனுராக் காஷ்யப்.




தற்பொழுது 'ஒன் டூ ஒன்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது வில்லனாக நடிக்கும் அனுராக் காஷ்யப் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இயக்குனர் சுந்தர்.சி, குஷ்பூ ஆகியோருடன் அனுராக் காஷ்யப் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் சுந்தர்.சி யின் மனைவி குஷ்பு.

Tags:    

Similar News