தனது சொந்த செலவில் ராணுவ வீரர்களுக்கு விருந்தளித்த ராம்சரண்

Update: 2022-04-20 10:30 GMT

பஞ்சாப்பில் ராணுவ வீரர்களுக்கு அறுசுவை உணவுடன் விருந்து அளித்துள்ளார் நடிகர் ராம் சரண்.





ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து நடிகர் ராம்சரண் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் அறியப்படும் ஒரு முக்கிய நடிகராகிவிட்டார், இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் இயக்கும் படத்திற்காக தற்போது பஞ்சாப்பில் முகாமிட்டுள்ள ராம்சரண் அங்கு ராணுவ வீரர்களுக்கு தன் சார்பில் விருந்து அளித்துள்ளார்.


 



படப்பிடிப்பு இடைவேளையில் பஞ்சாப் எல்லையில் உள்ள ராணுவ வீரர்களின் படை முகாமிற்கு சென்ற ராம்சரண் அங்கு ராணுவ வீரர்களுடன் சில மணி நேரங்கள் செலவிட்டு உரையாடியுள்ளார், அதுமட்டுமல்லாது தனது சொந்த செலவில் ராணுவ வீரர்களுக்கு அறுசுவை விருந்து அளித்துள்ளார் ராம்சரண், ராம் சரணின் இந்த செயலால் ராணுவ வீரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News