கொடுங்கலூர் அம்மன் கோவிலுக்கு வாள், சிலம்பு காணிக்கையாக அளித்த சுரேஷ்கோபி

Update: 2022-04-21 08:00 GMT

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவிலுக்கு வாள் மற்றும் சிலம்பை காணிக்கையாக அளித்துள்ளார் நடிகர் சுரேஷ்கோபி.




நடிகரும், பாரதிய ஜனதா மேல்சபை எம்.பி'யுமான சுரேஷ்கோபி தீவிர ஆன்மிக ஈடுபாடு உடையவர், இவர் அடிக்கடி கோவிலுக்கு சென்று வழிபடும் வழக்கமும் உடையவர். தற்பொழுது இவர் கேரளாவில் உள்ள கொடுங்கலூரில் பிரசித்திபெற்ற பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு வாளும், சிலம்பும் காணிக்கையாக வழங்கி உள்ளார்.





காணிக்கைகளை வழங்கிவிட்டு கொடும்பலூர் கோவிலில் தரிசனம் முடித்த பின்னர் அவர் திருச்சூர் கோவிலுக்கு சென்றார் அங்கு பூரம் விழாவையொட்டி சமய கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

Tags:    

Similar News